Showing posts with label My cycle trip. Show all posts
Showing posts with label My cycle trip. Show all posts

Wednesday, November 6, 2013

என் சைக்கிள் பயனம்

சரி நாமலும் தமிழில் ஒரு கதை போட்டா என்ன அப்படினு ஒரு யோசனை
இதோ உங்களின் பாசமிகு அபர்ணாவின் சைக்கிள் பயணம்.
சின்ன வயசுல சைகிள் ஓட்டனும்னு கொல்ல பிரியம். அப்பா கிட்ட கேட்டேன்.. ஒத விழும் சொலிட்டாரு.சரினு மனச தேத்திட்டு. வெளிய வந்தேன் அப்பா வோட சைகிள் இருந்தது. அதுவும் பெரிசு பார் வைச்சது.சரி ஒன்னும் இல்லாததுக்கு ஒரு பொன்னாம்னு அந்த சைக்கிள ஒட்ட அரம்பிச்சேன்

சும்மா சுப்பரா ஒட்டினேன். இந்த சைக்கிள் ஒட்டறத்துக்கே டியுசன் எல்லாம் ஒழுங்கா போனேன்.என்னோட பயணத்தை விட்டிலிருந்து காலை 6.30 மணிக்கே கிளம்பிடுவேன். வெளிய சொன்னா வெக்ககேடு, பரவாயில்ல இருந்தாலும் சொல்லறென். டியுசன் என்னவொ 
7 மணிக்குதான் அதுவும் விட்டுலேந்து 5நிமிஷம் நடந்தா, ஆனா நான் சைக்கிள்     மீது காதல் கொண்டு அதுலதான் போனேன்.

.ரெண்டு ரவுண்டு அடிச்சுட்டு டியுசன் போய் சேருவேன்.அதோட விடாம டியுசன் விட்டதும் நேரா ஸ்குலுக்கு போய் என்னொட ஃபயை வைச்சிட்டு திரும்பவும் விட்டுக்கு வந்துட்டு காலம்பரசாப்பிட்டு, நடந்து ஸ்குலுக்கு போவேன். இப்படி போயிட்டி விட்டுக்கு சைக்கிள்ள வரும் போதேலாம் அங்க ஒரு சாமி சிலை இருக்கும். எப்பொதும் அந்த சிலையைபார்த்துட்டு எல்லாரையும் நல்லா வைச்சுக்கோ சாமி  அப்படி மனசார வேண்டிட்டு போவேன்.

அப்படி ஒரு நாள் ஸ்குல்ல ஃபயை வைச்சுட்டு சைக்கிள்ள வரும் போது சாமி சிலையை பார்த்துட்டு ஒரு ஆர்வத்துல ரெண்டு கையலயும்கும்பிடு போட்டேன், அப்போ எனொட நிலைமையை யோசிச்சு பாருங்க..சேம அடி.. இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது.....

அய்யொ அய்யொ ஒரே காமடி போங்க!!!!!!!!!
P.S: cross posted in infy blog when i was working